உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதாவா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் , 26 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று (ஆக-26 ) இரவு 40 பயணிகளுடன் கான்பூரிலிருந்து ஆக்ரா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் , ' சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்த இருவர் ஷாபாய் மருத்துவக் கல்லுரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். லேசான காயம் அடைந்த 26 பேர் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ' எனத் தெரிவித்தார்.