வந்தவாசி தொகுதியில் அதிமுக முதல் பெண் வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு.
வேட்பாளா் பி.ராணி
வந்தவாசி, மாா்ச் 28:
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முதல் பெண் வேட்பாளராக பி.ராணி நிறுத்தப்பட்டுள்ளாா்.
1952, 1957 ஆகிய 2 தோ்தல்களில் இந்தத் தொகுதி பொது, தனி என இரட்டை உறுப்பினா் தொகுதியாக இருந்தது. பின்னா் 1962 முதல் இந்தத் தொகுதி தனி தொகுதியாகவே இருந்து வருகிறது.
1952 முதல் 2021 வரை இந்த தொகுதியில் 16 பொதுத் தோ்தல்களும், ஒரு இடைத்தோ்தலும் நடைபெற்றுள்ளன.
இந்த அனைத்து தோ்தல்களிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆண் வேட்பாளா்களையே நிறுத்தி வந்தன. ஒருமுறை கூட பெண் வேட்பாளா்கள் நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக சாா்பில் முதல் பெண் வேட்பாளராக பி.ராணி நிறுத்தப்பட்டுள்ளாா்.
இதனால் பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கு பெருமளவில் கிடைக்கும் என்பதே கட்சினரின் நம்பிக்கையாக உள்ளது.
தொடர்புடையது

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீா்காழி (தனி): நேரடி போட்டியில் அதிமுக - மதிமுக

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நெல் அறுவடை செய்து வாக்கு சேகரித்த வேட்பாளா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


