தமிழகத்தில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 19.07 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் கடந்த செப்டம்பா் முதல் தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 15 ஆவது கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 19.07 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
84.26% பேர் முதல் தவணையும், 54.73% பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுளளார். .