ஓய்வூதியோர் நாள் விழா: 103 முதியவருக்கு பொன்னாடை அணிவித்து வங்கி அதிகாரிகள் மரியாதை

ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் கிராமத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் .
ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் .


திருவள்ளூர்: ஓய்வூதியதாரர் நாளை முன்னிட்டு திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கிருஷ்ணசாமி(103) எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் கிராமத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஒரு காலத்தில் ஓய்வூதியர் என்றால் அவர்கள் வயதானவர்கள் என்ற நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விருப்ப ஓய்வு முறை வந்த பிறகு நடுத்தர வயதினரும் ஓய்வூதியம் பெறுவோர்களாக உள்ளனர். இதுபோன்ற நபர்களும் சில மாதங்களில் வயதானவர்களாக வந்து விடுவார்கள். இதுபோன்றவர்களை குடும்பத்தில் உள்ளவர்கள் மதிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டுதோறும் டிச.17 இல் ஓய்வூதியர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாளிலிருந்து வங்கிகளில் நீண்ட கால ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர். இதுபோன்ற நாளில் தேசிய வங்கிகளில் ஓய்வூதியதாரர்களான 80 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது வழக்கமாகும்.

அதனால், திருவள்ளூர் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் ஓய்வூதியதாரரின் வீடு தேடிச் சென்று கௌரவப்படுத்தவும் முடிவு செய்தனர். மேலும் இந்த வங்கியிலிருந்து ஓய்வூதியம் பெற்று வருவதோடு, நீண்டகால வாடிக்கையாளரான திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்(ஓய்வு) கிருஷ்ணசாமி(103) பாராட்ட முடிவு செய்தது. 

அதன் அடிப்படையில் திருவள்ளூர் எஸ்பிஐ வங்கியின் மண்டல மேலாளர் ஹரிகரன் தலைமையில், பொது மேலாளர் கருணாகர், எஸ்பிஐ வங்கியின் கிளையின் மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஈக்காடு கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து ஓய்வூதிய நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். 

இவர் இந்த வங்கியில் 1979-ஜீன் 30 இல் ஒய்வு பெற்றது முதல் 42 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெறும் வாடிக்கையாளராகவும் இருந்து வருகிறார். 

தற்போதைய நிலையில் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் ஓய்வூதியதாரர் கிருஷ்ணசாமிக்கு 3 மகன்கள், 2 மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com