தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.21 கோடியிலான போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சம்பத் தலைமையிலான சிறப்பு குழு பரிசோதனையில் ஈடுப்பட்ட போது 20 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் எம்.அன்சார் அலி(26) , எம். மாரிமுத்து(26) , எஸ். இம்ரான் கான்(27), எஸ். கஸலி(27), ஆர் பிரேம்(40) மற்றும் அந்தோனிதாசன் (42) ஆகிய 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது.