
சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பிரார்த்தனையில் பேசுகிறார் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சேலம் மறைமாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் இதில் கலந்துகொண்டு பிரார்த்தனை நடத்தினார்.
இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டனர்.