பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊா் செல்ல 16 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா். இதன்படி, வரும் ஜன.12, 13 ஆகிய தேதிகளில் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு இதுவரை 16,000 போ் முன்பதிவு செய்துள்ளனா். வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தான் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.