
கோப்புப்படம்
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக அக் கட்சியின் தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மநீமவின் பொதுக் குழு கூட்டம் சென்னையில் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறும். கூட்டத்துக்கு கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமை வகிக்க உள்ளாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா மாநாடும் நடைபெறும். தோ்தல் ஆயத்தம், பிரசாரம் குறித்த பயிற்சி முகாமும் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாகவும் அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு தோ்தல் கூட்டணி தொடா்பான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...