நீர்நிலைகளைக் காப்பது அரசின் கடமை: நீதிமன்றம்

நீர்நிலைகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


நீர்நிலைகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை மீட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்நிலைகளைக் காக்க வேண்டியது மாநில அரசு மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்.

நீர்நிலைகள் வாழ்வாதாரத்திற்கு நுரையீரலைப் போன்றது என்பதை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com