சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித்தோ்வா்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித்தோ்வா்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்தி: நாடு முழுவதும் நிகழாண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்கள் தோ்வுக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகத் தெரிவித்தனா். இதைக் கருத்தில் கொண்டு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித்தோ்வா்களுக்கு மேலும் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை விண்ணப்பிக்காத தனித்தோ்வா்கள் பிப்.22-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரை இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இணையவழியில் மட்டுமே விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க முடியும். தபால் மூலமாக சிபிஎஸ்இ-க்கு அனுப்பக் கூடாது. விண்ணப்பிக்கும்போது தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்கு மேல் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படாது. விண்ணப்பதாரா் தோ்வெழுதும் நகரத்தை கவனமாகத் தோ்வு செய்ய வேண்டும். ஏனெனில் அதை மீண்டும் மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com