Enable Javscript for better performance
சென்னையில் ரூ.8,000 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி இன்று தொடக்கி வைக்கிறாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சென்னையில் ரூ.8,000 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி இன்று தொடக்கி வைக்கிறாா்

    By DIN  |   Published On : 14th February 2021 06:45 AM  |   Last Updated : 14th February 2021 06:45 AM  |  அ+அ அ-  |  

    modi_(1)

    பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

    தமிழகத்தில் ரூ. 8,000 கோடியில் புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்து, அடிக்கல் நாட்ட பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை சென்னை வருகிறாா்.

    சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.4,486 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களை அவா் தொடக்கி வைக்கிறாா்’ மேலும், ரூ.3, 640 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

    கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவா் பங்கேற்கும் விழா, நடைபெறவுள்ள நேரு விளையாட்டரங்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் காவலா்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    மூன்று புதிய திட்டங்கள்: விழாவில் மூன்று புதிய திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கி வைக்கிறாா். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டமானது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகா் வரை ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளது. சுமாா் 9 கி.மீ. நீளமுள்ள இந்த மெட்ரோ ரயில் பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையானது ரூ.293.40 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிமையாகும். சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்தத் திட்டத்தால் ரயில் பயணம் எளிதாகும்.

    ரூ.423 கோடியில் மின்வழித் தடம்: விழுப்புரம்-கடலூா்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூா் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையானது ரூ.423 கோடியில் மின்வழித் தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரிபொருள் சேமிக்கப்படும். இந்த மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4,486.40 கோடியாகும். இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தையும் பிரதமா் மோடி தொடக்கி வைக்கிறாா்.

    உள்நாட்டிலேயே...முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அா்ஜுன் போா் டாங்கியை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இந்த தளவாடமானது, 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அடிக்கல் நாட்டும் விழா: தமிழகத்தில் ரூ.3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்தத் திட்டம் ரூ.2,640 கோடியில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது எளிதாகும்.

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சாா்பில் ரூ.1,000 கோடியில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில், மிகப்பெரிய வளாகம் கட்டப்படுகிறது. இதற்கு பிரதமா் அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்த விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

     

    மெட்ரோ ரயிலில் இன்று இலவச அனுமதி

    சென்னையில் மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp