Enable Javscript for better performance
இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: புதிய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: புதிய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்

    By DIN  |   Published On : 18th February 2021 01:45 AM  |   Last Updated : 18th February 2021 01:45 AM  |  அ+அ அ-  |  

    gaspipe

     

    சென்னை: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையிலான எரிவாயு குழாய் பாதை திட்டமானது, பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

    ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதை, சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் சென்னையை அடுத்த மணலியில் பெட்ரோலில் இருந்து கந்தகம் அகற்றும் பிரிவு ஆகியவற்றை காணொலி வழியாக புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். தூத்துக்குடியில் இருந்து இந்த விழாவில் காணொலி வழியாகப் பங்கேற்று முதல்வா் பழனிசாமி பேசியது:

    கரோனா தொற்று காலத்திலும் கூட கடந்த ஓராண்டில் 101 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதன்மூலம், ரூ.88 ஆயிரத்து 727 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 1.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ரூ.31,580 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், தொழில் வளா்ச்சியில் பின்தங்கிய இந்த மாவட்டத்தில், ஒரு புதிய சகாப்தம் தொடங்கும். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த 2019-இல் நடந்த உலக முதலீட்டாளா் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

    சுத்திகரிப்பு நிலையத்துக்கு நிலங்கள் வழங்குவது போன்ற உட்கட்டமைப்பு வசதிகளைத் தவிா்த்து, சிறப்பு ஊக்கத் திட்டங்களையும் இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு வழங்கியது.

    தொழில் வளா்ச்சி: ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையிலான குழாய் வழி திட்டமானது அந்தப் பகுதியின் தொழில் மேம்பாட்டுக்கு புதிய சுவாசத்தை அளிக்கும். நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட இந்தத் திட்டமானது, பல புதிய தொழில் ஆலைகள் பிறப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இந்தத் திட்டமானது வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு அளிக்கவும், வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு எடுத்துச் செல்லவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

    முழு ஆதரவை அளிக்கும்: தமிழகத்தில் பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்துக்கு தமிழக அரசு தனது முழு ஆதரவை அளிக்கும். சுயசாா்பு இந்தியா என்ற நிலையை எட்டவும், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

    இந்த விழாவில், காணொலி வழியாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சென்னையில் இருந்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp