தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 167-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் 167வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், க. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.