Enable Javscript for better performance
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிப்.21 முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிப்.21 முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு

    By DIN  |   Published On : 20th February 2021 03:23 PM  |   Last Updated : 20th February 2021 03:23 PM  |  அ+அ அ-  |  

    WhatsApp_Image_2021-02-20_at_1

    வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்ற வனத்துறை ஊழியர்கள்

     

    களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை (பிப். 21) முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்குகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1962ஆம் ஆண்டு களக்காடு புலிகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டு சரணாலயங்களும் இணைக்கப்பட்டு, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகமாக ஆக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 1,601 சதுர கிலோ மீட்டர். இதில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அடர்ந்த காடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாகத் திகழும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, அம்பாசமுத்திரம், முண்டந்துறை, பாபநாசம், கடையம் வன சரகங்கள் உள்ளன. 

    ஆண்டுதோறும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஜனவரியில் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிகழாண்டு கரோனாத் தாக்கத்தால் பிப்ரவரியில் நடைபெறுகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம் கோட்டத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்குப் பயிற்சி நடைபெற்றது. அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய நான்கு வனச்சரகங்களுக்கு உள்பட்ட 29 பீட்களில் 58 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் 110 வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். 

    பிப். 21 முதல் பிப். 26 வரை ஆறு நாள்கள் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் முதல் மூன்று நாள்கள் மாமிச உண்ணி மற்றும் தாவர உண்ணிகள் குறித்தக் கணக்கெடுப்பும், அடுத்த மூன்று நாள்கள் நேர்கோட்டு முறையில் விலங்குகளின் பாதைகளில் காணப்படும் தடங்கள், எச்சங்கள் மூலம் விலங்குகள் கணக்கெடுப்பும் நடைபெறுகின்றன. 

    முண்டந்துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியில் சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் ஆகியோர் வனத்துறை ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சியில் பாபநாசம் வனச்சரகர் பரத், பயிற்சி வனச்சரகர் சிவா, வனவர்கள் ஜெகன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp