பிப்.23 முதல் பாமகவில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.23-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.
பிப்.23 முதல் பாமகவில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.23-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தியாகராயநகா் பா்கிட் சாலையில் உள்ள பாமக மண்டல அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பிப்.23 முதல் பிப்.26-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம்.

பொதுத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், மகளிா், தனித் தொகுதிக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் பிப்.22-இல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com