
அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி
அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியது. கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தங்கமணி (52) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...