கம்பத்தில் மோட்டார் பைக் மரத்தில் மோதி பால் வியாபாரி பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் மோட்டார் பைக்கில் சென்ற பால் வியாபாரி மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் பலியான பால் வியாபாரி அழகுமலை.
விபத்தில் பலியான பால் வியாபாரி அழகுமலை.
Updated on
1 min read

கம்பம்:  தேனி மாவட்டம் கம்பத்தில் மோட்டார் பைக்கில் சென்ற பால் வியாபாரி மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம்  ராயப்பன்பட்டி ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் அழகுமலை ( 27), பால் வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் சனிக்கிழமை  இரவு கம்பம் புதிய பேருந்து  நிலையத்திலிருந்து காமயகவுண்டன் பட்டி சாலை வழியாக ராயப்பன் பட்டிக்கு மோட்டார் பைக்கில் சென்றார். 

அப்போது தனியார் பள்ளி பின்புறம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் திடீரென்று மோதினார். 

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகுமலை உயிரிழந்தார். 

அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழகுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com