புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ்


புதுச்சேரி:  புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வரவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை (பிப். 27) முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும்.

முன்னதாக, விருப்ப மனுவை ரூ. 100 செலுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, உரிய ஆவணங்களை இணைத்து, பொதுப்பிரிவினர் ரூ. 5,000, ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் ரூ. 2,500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மனுக்களை பெறவும், பரிசீலித்து தலைமைக்கு அனுப்பவும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் தனுஷ், இளையராஜா, ரகுமான், மணிமாறன் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com