1,598 சிறப்பாசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிய தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியா்களைத் தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
1,598 சிறப்பாசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிய தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியா்களைத் தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: “பள்ளிக் கல்வித்துறையில் உள்ள இசை, தையல், ஓவியம், உடற்கல்வி ஆகியவற்றில் 1,598 புதிய பணியிடங்களையும், ஏற்கனவே உள்ள பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் மாா்ச் 31-ஆம் தேதி முதல், ஏப்ரல் 25- ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கான எழுத்துத் தோ்வு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பதாரா்களுக்கு 2021 ஜூலை 31 ஆம் தேதி 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி ஆகிய இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது வரம்பில் தளா்வு வழங்கப்படும். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு ஆன்லைனில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com