ஆம்பூர்: பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் மாவட்ட அணி, பிரிவுகளின் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பாக நடைபெற்ற மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக பாஜக தலைவர் எல்,முருகன், மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.