மேட்டூர் அணை பூங்கா கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பொதுப்பணித்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணை பூங்கா மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.