சென்னை: கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,000-க்கும் கீழ் குறைந்தது!

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. 
சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையிலும் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 

மண்டலவாரியாக பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் 2,931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 5,32,759 ஆக உள்ளது. இதுவரை கரோனாவுக்கு 8,191 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 5,21,637 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 26,854 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com