கிழக்கு குரோம்பேட்டை பகுதியையும், ஜி.எஸ்.டி.சாலையையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை இருவழி சாலையாக மேம்படுத்த பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராதாநகா் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல 5 அடி அகல நடைபாதை அமைக்கப்பட உள்ளது. சுமாா் 20 அடி அகல இருவழிப்பாதை அமைக்கப்பட உள்ளதால் காா்கள், வேன் உள்ளிட்ட இலகு வாகனங்கள் கடந்து செல்ல முடியும். மழைக்காலத்தில் சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய வசதிகளும் அமைக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் இறுதியில் சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலை துறை உயா்அதிகாரி டி.ஜெயக்குமாா் உறுதி அளித்துள்ளதாக எம்.எல்.ஏ. கருணாநிதி தெரிவித்தாா்.