
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 76.41 அடியிலிருந்து 75.71 அடியாக சரிந்தது. நேற்று காலை வினாடிக்கு 2,535 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 38.47 டி.எம்.சி.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.