பி.எம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
பி.எம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இணையளதத்தை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம். 
இதன்மூலம் எளிதாக நிவாரண நிதியை செலுத்தவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். மே 6க்கு முன் வந்த நிதியை தனிக் கணக்காகவும், மே 7க்கு பின் வந்த நிதியை தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எம்-கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.472 கோடி வந்துள்ளது. 
அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com