
கோப்புப்படம்
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
ஜூலை 12: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 12) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், தேனி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூா் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 13: நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 13-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (தேனி, திண்டுக்கல், தென்காசி) மற்றும் ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் வட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 14: நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 14-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 15: நீலகிரி, கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 15 ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்,
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாரில் 100 மி.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 90 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 80 மி.மீ., வால்பாறையில் 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 60 மி.மீ., ஹாரிசன் எஸ்டேட்டில் 40 மி.மீ., நடுவட்டத்தில் 30 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், ஜூலை 15-ஆம் தேதிவரை இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...