தமிழ்நாடு
சென்னையில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் ஜூலை 15ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் ஜூலை 15ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் 15ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மதுரவாயல் பகுதி; எம்.எம்.டி.ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ்காந்தி நகர், கணபதி நகர், அய்யப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.