
பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகரிக்கும் மின்தேவையைக் கருத்தில் கொண்டு, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அனல்மின் நிலையங்களின் மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில், கடந்த வாரம் பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், இங்கு 1,230 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டது. பின்னா், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகள் காரணமாக மின்தேவை அதிகரிக்கும் என்பதால், தற்போது 2,386 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் நாள்களில் மின்தேவை அதிகரித்தால், மின் உற்பத்தி மேலும் அதிகரிப்படும் என்றனா்.