புதுவையில் 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்வு; 600-ஐத் தாண்டியது

புதுவையில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு 600-ஐத் தாண்டியுள்ளது.
புதுவையில் 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்வு; 600-ஐத் தாண்டியது
புதுவையில் 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்வு; 600-ஐத் தாண்டியது

புதுச்சேரி: புதுவையில் தொடர்ந்து 2வது நாளாக கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு 600-ஐத் தாண்டியுள்ளது.

புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு கடந்த திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்த நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 642 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதே வேளையில், கரோனாவுக்கு பலியானோர் எணணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது. 

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் புதிதாக 642 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,10,748 லட்சமாக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 1,648 ஆக உள்ளது.

மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என மொத்தம் 6,853 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வந்ததால் பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15- ஆம் தேதி 413 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் பிறகு தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. புதிய உச்சமாக மே 11- ஆம் தேதி 2,049 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் 500-ஐ எட்டியிருந்த நிலையில், இன்று 600-ஐத் தாண்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com