தமிழ்நாட்டில் 6,895 ஆக குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,895 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6,895 ஆக குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 6,895 ஆக குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,895 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,36,819  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 194 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 31580ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 13,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,65,375 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,15,05,639 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com