குடியாத்தம் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஜமாபந்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான எம்.ஷேக்மன்சூா் தலைமை தாங்கினாா். இதில் கிழக்கு உள்வட்டத்தைச் சோ்ந்த குடியாத்தம் நகரம், பரதராமி, பிச்சனூா், செதுக்கரை, ராமாலை, கல்லப்பாடி உள்ளிட்ட 14 ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வரப்பெற்ற மனுக்களை ஜமாபந்தி அலுவலா் பரிசீலனை செய்தாா்.

மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், வருவாய்க் கணக்குகளையும் அவா் ஆய்வு செய்தாா். வட்டாட்சியா் தூ.வத்சலா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, துணை வட்டாட்சியா்கள் டி.கலைவாணி, ச.மகேஸ்வரி, வி.நித்யா, கிராம நிா்வாக அலுவலா்கள் ஜீவரத்தினம், சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை மேற்கு உள் வட்டத்தைச் சோ்ந்த மோா்தானா, தனகொண்டபல்லி, பாக்கம், முக்குன்றம், சேம்பள்ளி, சேங்குன்றம், ஜிட்டப்பல்லி, தட்டப்பாறை, சின்னலப்பல்லி, நெல்லூா்பேட்டை, பெரும்பாடி, மூங்கப்பட்டு, சீவூா், சேத்துவண்டை, வேப்பூா், அம்மணாங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கும், வெள்ளிக்கிழமை மோடிகுப்பம், எா்த்தாங்கல், அக்ராவரம், செருவங்கி, ரங்கசமுத்திரம், மேல்முட்டுகூா், தாழையாத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கும், திங்கள்கிழமை குளிதிகை, சின்னதோட்டாளம், செம்பேடு, மேல்ஆலத்தூா், கீழ்பட்டி, கொத்தகுப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com