சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 
சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களின் நண்பனாக விளங்க வேண்டிய காவல்துறை பொதுமக்களை அடித்து துன்புறுத்தும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றன. 
சில நாட்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம், மலையடிப்படி, குறிஞ்சி நகரைச் சேர்ந்த கட்டத் தொழிலாளியான பாலமுருகன் என்பவர் கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைத் தொகுப்பினை வாங்கச் சென்றபோது வாய்த் தகராறு ஏற்பட்டதாகவும், பின் வீட்டிற்கு சென்றுவிட்ட இவரை ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் பூட்ஸ் காலால் தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், இதற்கான விடியோ வலைதளங்களில் பரவியதன் காரணமாக தொர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.
இதேபோன்று தென்காசி மாவட்டம், செங்கோட்டைய அடுத்த புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்த மற்றுத்திறனாளி பிரான்சிஸ் அந்தோணி என்பவர் ரேசன் கடையில் வாங்கிய அரிசியை தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எடுத்துச்சென்றபோது, புளியரை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடமிருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு, விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவருடைய மகன் போராட்டத்தில் ஈபட்டதையடுத்து, தொடர்புடைய காவல்துறையினர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையமும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் அருகே, இடையப்படி, வில்வனூர் மேற்கு காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் விடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டோர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு அவை பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்த பிறகுதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளிலும் வெளிவராத நிகழ்வுகள் நிறைய இருக்கக்கூடம். தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, தவறு செய்திருந்தால், தொடர்புடைய நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அதற்கான ஆதாரங்களை திரட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெறுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையினரே தாக்குதல் நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது மனித உரிமை மீறும் செயல். 
 எனவே, முதல்வர் இதில் தனிக்கவனன் செலுத்தி, இதுபோன்ற காவல்துறை அத்துமீறல்கள் இனி நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சட்டத்திற்குட்பட்டு செயல்படுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com