முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி

நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்

நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த  முன்னாள் அமைச்சா் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சைதாப்பேட்டை சிறைச்சாலையிலிருந்து இன்று காலை திடீரென புழல் சிறைக்கு மணிகண்டன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு சைதாப்பேட்டை சிறைச்சாலையில் விதிகளை மீறி சில கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் மணிகண்டன். இவருக்கு எதிராக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிா் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சா் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த ஜூன் 20-ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சா் மணிகண்டன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com