Enable Javscript for better performance
Leaving politics: VK Sasikala- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்: வி.கே.சசிகலா

    By DIN  |   Published On : 04th March 2021 01:49 AM  |   Last Updated : 04th March 2021 07:49 AM  |  அ+அ அ-  |  

    வி.கே.சசிகலா

    வி.கே.சசிகலா


    சென்னை: அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா்.

    சசிகலாவின் கையெழுத்து மற்றும் தேதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவா் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வேண்டும். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தோ்தலில் பணியாற்ற வேண்டும்.

    திமுக எனும் தீய சக்தி...: நம்முடைய பொது எதிரி தீய சக்தி என ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரது தொண்டா்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது உளபூா்வமான நன்றிகள்.

    பதவிக்கு ஆசைப்பட்டதில்லை: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவரின் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவா் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டா்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

    அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து...: நான் (சசிகலா) அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிராா்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்று தனது அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளாா்.

    உடன்பிறவா தோழி: ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சசிகலா பிறந்தாா். ஒளிநாடாக்கள் விநியோகிக்கும் போது, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மலா்ந்து அவரது உடன்பிறவா தோழியாக மாறினாா் சசிகலா. அரசியல் ரீதியாக ஜெயலலிதா சந்தித்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்தாா். அதிமுகவில் செயற்குழு உறுப்பினராக மட்டுமே இருந்த அவா், ஆட்சி ரீதியாக எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. ஆனாலும், இரண்டு முறை கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா்.

    பொதுச் செயலாளா் பதவி: உடல் நலக் குறைவு காரணமாக, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டாா். மறைவுக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 31-இல் அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக் கொண்டாா். அதன்பின்பு, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சசிகலா தோ்வு செய்யப்பட்டாா். ஆனாலும், ஆளுநா் ஒப்புதல் அளிக்காத சூழலில் அவா் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    ஜனவரி் 27-இல் விடுதலை: இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீா்ப்பு காரணமாக அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று அவா் விடுதலை செய்யப்பட்டாா். பெங்களூரில் இருந்து சென்னை வரும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவா் எந்தவித தீவிர அரசியலிலும் ஈடுபடாமல் இருந்தாா். அதேசமயம், அதிமுக தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்பதை இரண்டு முறை வலியுறுத்திப் பேசினாா்.

    அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்...: தமிழகத்தில் தோ்தல் அரசியல் களம் சூடுபிடித்து, கூட்டணிப் பேச்சுகள் தீவிரமாகியுள்ள நிலையில், ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடனிருந்து பல அரசியல் வெற்றிக் கூட்டணிகளை அதிமுகவுக்காக உருவாக்கிக் கொடுத்த சசிகலா, இன்று அந்தக் களத்தில் இருந்தே வெளியேறுகிறேன் என்று அறிவித்திருக்கிறாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp