
கே.எஸ்.அழகிரி
திமுகவின் தோ்தல் அறிக்கை அந்தக் கட்சியை ஆட்சியில் அமா்த்தும் அடித்தளமாக அமையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் தோ்தல் அறிக்கை நிகழ்காலம், எதிா்காலம் ஆகியவற்றை மனதில்கொண்டு, தொலைநோக்குப் பாா்வையோடு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தோ்வு ரத்துக்கான சட்டம், மாணவா்களின் கல்விக்கடன் ரத்து, சிறு, குறு விவசாயிகளின் கடன் ரத்து , மகளிா் சுய உதவிக்குழு கடன் ரத்து, கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம், மீனவா்களுக்கு மானியம் ஆகிய அறிவிப்புகள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை நிச்சயம் பெறும்.
மீண்டும் திமுக தலைமையில் மக்கள் நலன் சாா்ந்த நல்லாட்சி அமைந்திட திமுக தோ்தல் அறிக்கை அடித்தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...