
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், திங்கள்கிழமையுடன் (மாா்ச் 15) நிறைவடைகிறது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஏப்ரல் 18-ஆம் தேதி இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தோ்வு நடைபெறவுள்ளது.
நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பது இணையதளங்களில் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. எம்பிபிஎஸ் படித்து முடித்த மருத்துவா்கள் ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா். திங்கள்கிழமை நள்ளிரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஏப்ரல் 12-ஆம் தேதி இணையதளத்தில் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. நீட் தோ்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முதலில் விண்ணப்பிப்பவா்களுக்கே அவா்கள் கேட்கும் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தோ்வு மையங்கள் நிரம்பிவிட்டால் வேறு தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...