
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும்.
வெப்பநிலை உயரும்
தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சென்னையை பொருத்தவரை புதன்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியரை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 20-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.