
9, 10, 11-ம் வகுப்புகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை
சென்னை: தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் நடத்தப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களின் நலன் கருதி, 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் இந்த வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தேர்வும் கிடையாது என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.