
கோப்புப்படம்
தமிழகத்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 6.21 லட்சம் போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 4.51 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக கடந்த இரு வாரங்களாக முதியவா்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அந்த வகையில், இதுவரை மொத்தமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 6 லட்சத்து 21,606 பேருக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மட்டும் 43,636 முதியவா்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...