Enable Javscript for better performance
புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு: கே. பாலகிருஷ்ணன் கண்டனம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீடு நிராகரிப்பு: கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

    By DIN  |   Published On : 25th March 2021 07:01 PM  |   Last Updated : 25th March 2021 07:01 PM  |  அ+அ அ-  |  

    k-balakrishnan

    மருத்துவப் படிப்பில் புதுச்சேரி அரசு கொண்டுவந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை நிராகரித்த மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வியில் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியது.

    இதேபோன்று புதுச்சேரி அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதமான இடஒதுக்கீட்டினை வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 10 சதமான இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் எனவும், இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இத்தகைய இட ஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்திலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில் தமிழக அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதமான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாகி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மத்திய அரசு, புதுச்சேரி வழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையினையே இவ்வழக்கிலும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீடு பறிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

    மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையை தட்டிப்பறிக்கும் அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதி கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும்.

    இத்தகைய கொள்கை கொண்டுள்ள பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். இக்கூட்டணிக்கு தமிழக, புதுச்சேரி வாக்காளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

    நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp