20 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் மலரும் தாமரை

தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் தாமரை மலா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் தாமரை மலா்ந்துள்ளது. வெற்றி வேட்பாளா்கள் நான்கு போ் வரை பேரவைக்குச் செல்லவுள்ளனா். கடந்த 2001-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது, 21 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி, காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூா், தளி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இப்போது அதிமுக: 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பெற்று பேரவையில் நுழைந்த பாஜக, இப்போது அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்று மீண்டும் பேரவைக்குச் செல்லவுள்ளது. நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com