தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் விண்ணப்ப சேவை மூலம், கரோனா பாதித்து மருத்துவமனைகளில் படுக்கை வசதி பெற வேண்டிய நபர்களுக்கு படுக்கை வசதி கிடைப்பதை உறுதி செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நோயாளியின் பெயர், வயது, முகவரி, தற்போது இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெறும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.