புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை (மே 11) பதவியேற்பார்கள் என்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பார்கள்.
புதிய பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பேரவைத் தலைவராக செயல்படுவேன்.
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.