
சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 30,355 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 2.44 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 14 லட்சத்து 68,864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 19,508 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 79,658-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 72,735 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 293 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471-ஆக அதிகரித்துள்ளது.