மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 67-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இங்குள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வியாழக்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் மாவட்ட துணைச் செயலாளர் சின்னை மா. மணிகண்டன் பங்கேற்று தனது சொந்த செலவில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் ராஜேஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர்கள் என்,பி, நமச்சிவாயம், முன்னாள் கவுன்சிலர் கே.தெய்வேந்திரன்,மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் தே.குமார் 6 -ஆவது வார்டு பிரதிநிதி பாபா கணேசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.