கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
படிக்க: எழுத்தாளர் கி.ரா. காலமானார்
கரிசல் குயில்' கி.ராஜநாராயணன் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!
கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!
கி.ராஜநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மு.க.ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.