வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சொந்த ஊரில் எழுத்தாளர் கி.ரா. இறுதிச் சடங்கு

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கி.ராஜநாராயணன்
Updated On :18 மே 2021, 5:01 am

DIN

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள இடசெவலில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இன்று பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு கி.ரா. உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது அவரது உடல் லாஸ்பேட்டையிலுள்ள அரசு குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கி.ரா. இறுதிச் சடங்கில் அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு அவரது கோரிக்கைக்கு செவிசாய்த்துள்ளது.

எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கோவில்பட்டி அருகேவுள்ள இடைசெவல் கிராமத்திற்கு கி.ரா. உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.