ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!

ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

News image
அதானு சக்ரவர்த்தி.
Updated On :19 மார்ச் 2026, 11:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, திடீரென ராஜிநாமா செய்துவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரும் இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி, திடீரென ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலரான அதானு சக்ரவர்த்தி, 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிக்குள் பல்வேறு தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணான சில செயல்பாடுகளும் நடைமுறைகளும் நடைபெற்று வருவதாகவும், அவர் தனது ராஜிநாமா கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதானு சக்ரவர்த்தி பதவி விலகியுள்ள நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைவராக கேக்கி மிஸ்ட்ரியை நியமிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வங்கியுள்ளது.

இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கி கூறுகையில், மார்ச் 18 ஆம் தேதி இந்திய நேரப்படி 3.17 மணிக்கு ராஜிநாமா கடிதம் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது. அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு பேட்ச் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அதானு சக்ரவர்த்தி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதற்கு முன்னதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் நிர்வாகத் துறையின் செயலராகவும் பணியாற்றினார்.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாகம் சாராத தலைவராக அதானு சக்ரவர்த்தியை மூன்றாண்டுகள் நீட்டிப்பதற்கு அதன் நிர்வாகக் குழு கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது.

இவரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வரை உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே அவர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  

summary

Atanu Chakraborty on Wednesday resigned as non-executive chairman of HDFC Bank with immediate effect, citing concerns over "internal practices", in a development that could raise fresh questions over governance at a systemically important institution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.