2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!
எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.


புதுதில்லி: மதிப்பு மற்றும் நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, அதன் பகுதி நேரத் தலைவரும், இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் இன்றும் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து ரூ.778.60-ஐ எட்டியது. பிறகு 2.41 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிலைபெற்றது.
நிஃப்டி-யில் 2.22 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிறைவு.
எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.95,575.65 கோடி சரிந்து ரூ.12,01,267.28 கோடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...