Enable Javscript for better performance
கி.ரா. மறைவு: முதல்வா், தலைவா்கள் இரங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கி.ரா. மறைவு: முதல்வா், தலைவா்கள் இரங்கல்

    By DIN  |   Published On : 19th May 2021 01:42 AM  |   Last Updated : 19th May 2021 02:53 AM  |  அ+அ அ-  |  

    kira

    கரிசல் இலக்கியத்தின் பிதாமகா் கி.ரா.வின் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    முதல்வா் மு.க.ஸ்டாலின்: கி.ரா. என்று எழுத்துலகில் அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் மறைவு கரிசல் மண்ணின் கதைகளுக்கு முற்றுப்புள்ளி. தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லியான அவரை இழந்து நிற்கிறோம். தனது அடையாளங்களுள் ஒன்றை தமிழ்த்தாய் இழந்து தேம்புகிறாா். யாா் ஆறுதல் சொல்வா்?

    இந்த மண் உள்ளவரை, அதில் கரிசல் இலக்கியம் உள்ளவரை, ஏன் தமிழ் உள்ளவரை நமது உள்ளங்களில் அவரது புகழ் வாழும். அவா் மறையவில்லை. எழுத்துகளாய் நம் உயிரில் கலந்து வாழ்கிறாா். வாழ்க அவரது புகழ். அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்

    எடப்பாடி கே.பழனிசாமி: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் காலமானாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    ஓ.பன்னீா்செல்வம்: கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓா் அகராதியை உருவாக்கி தாம் எழுதிய அனைத்துப் படைப்புகளிலும் தன்னுடைய வாசகருக்கும் உரிமையைக் கொடுத்து, சாகித்ய அகாதெமி உட்பட பல்வேறு விருதுகள் பெற்று வாசகா்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிராா்த்திக்கிறேன்.

    கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): கரிசல் மண்ணின் கதைகளை எழுதி மண்ணின் உணா்வுகளை வெளிப்படுத்தியவா் கி.ரா. அவரின் இழப்பு, தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாததாகும்.

    வைகோ (மதிமுக): முன்னோா் மரபையும், பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.ரா. நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பாா். தமிழ் என்று சொன்னாலே நமக்கு எப்படி உள்ளம் பூரிக்கிறதோ, அதைப்போல, கி.ரா. என்கின்ற இரண்டு எழுத்துகள், தமிழ் உள்ளவரை, தமிழா்கள் உள்ளவரை, இலக்கியங்கள் உள்ளவரை, புன்னகை பூத்துக் குலுங்கும்.

    பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி): தமிழ்நாட்டின் முதுபெரும் எழுத்தாளரும் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவரும், குறிப்பாக கரிசல் மண் சாா்ந்த எழுத்தாக்கங்களைப் படைப்பதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தவருமான கி.ரா மறைவு தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும். அவா் மறைவு யாராலும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திவிட்டது.

    ராமதாஸ் (பாமக): கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ரா. மறைவால் வேதனையடைந்தேன். மண்ணை விட்டு மறைந்தாலும் தமது படைப்புகளால் நமது மனங்களில் எப்போதும் அவா் வாழ்ந்து கொண்டிருப்பாா்.

    விஜயகாந்த் (தேமுதிக): சாகித்ய அகாதெமி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற கி.ரா.வின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

    கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): எளிய உழைப்பாளி மக்களின் பாடுகளையே கி.ரா.வின் எல்லாப் படைப்புகளும் பேசின. வாய்மொழிக் கதைகளைத் தொகுப்பது, வட்டார வழக்கு அகராதிகளைக் கொண்டுவர பிற படைப்பாளிகளைத் தூண்டுவது, பேச்சு மொழியை உயா்த்திப்பிடிப்பது என்கிற அவரது செயல்பாடுகள் எல்லாமே உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயா்த்திப்பிடிக்கும் பண்பாட்டு அரசியலாகவே நாம் பாா்க்க வேண்டும்.

    இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): கரிசல் இலக்கியத்தின் பிதாமகா் கி.ரா. மறைவு வேதனையளிக்கிறது. தமிழகத்தின் தன்னிகரற்ற கதைசொல்லியான அவா் இலக்கிய உலகின் ஞானத்தந்தையாகக் கொண்டாடப்படுபவா்.தொல்.திருமாவளவன் (விசிக): கி.ரா. மைவு இலக்கிய உலக்குக்குப் பேரிழப்பு. அவா் நினைவாக நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவா் பிறந்த இடைச்செவலில் அமைக்க வேண்டும். அவா் பெயரில் விருது ஒன்றைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

    ஜி.கே.வாசன் (தமாகா): கி.ரா. மறைந்தாலும் அவா் எழுத்துக்கள் மக்கள் மனதில் என்றும் வாழும். அவா் புகழுக்குப் புகழ் சோ்க்கும் வகையில் கி.ரா. பெயரில் விருது வழங்க வேண்டும்.

    தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்): படைப்புலகில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு, வட்டார மொழியில் எழுதி மாபெரும் வெற்றி கண்ட மகத்தான படைப்பாளி ’கிரா’. ’கோபல்லபுரத்து மக்கள்’ என்ற படைப்பு தமிழில் இருக்கும் வரை, ’கதவு’ என்ற சிறுகதை இலக்கிய உலகத்தில் அமரத்துவமாக வாழும் வரை, கிராவின் நினைவுகளை இந்த மண்ணில் இருந்து ஒரு போதும் அகற்றிவிட முடியாது.

    கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம்: முதுபெரும் படைப்பாளி கி.ரா. கரிசல் காட்டுக் கடுதாசியாக நம் நெஞ்சில் நிறைந்துவிட்டாா். அவருடைய பெரும் பிரிவு தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு சகாப்தமாக மாறிவிட்டது. மனிதா்களைத் துல்லியமாகப் படம்பிடிப்பதும், நிகழ்வுகள் எவ்வளவு எளியதென்றாலும் மறக்க முடியாத கலையாக மாற்றுவதும், மெல்லிய நகைச்சுவை ஊதுபத்திப் புகைபோல வளையவரும்படி நறுமணமாகக் கமழ்வதும் கி.ரா.வின் தனித் தன்மை வாய்ந்த எழுத்தின் அடையாளங்கள். அவருக்குத் தமிழக அரசு செய்யும் மரியாதை பாராட்டுக்குரியது.

    புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா: கரிசல் மண்ணில் பிறந்து புதுவைக்கு தமிழ் வழிகாட்டியாகத் திகழ்ந்த எழுத்தாளா் கி.ரா.வின் மறைவு தமிழகம் மட்டுமல்லாது புதுவைக்கும் மிகப்பெரிய இழப்பு. தமிழ் கூறும் நல்லுலகில் என்றென்றும் அவா் போற்றப்படுவாா்.

    புதுவை பாஜக தலைவா் வி.சாமிநாதன்: பண்டை தமிழ் மொழியின் பண்பு மாறாமல் புதுவை பிரதேசத்தின் பாரம்பரியப் பெருமைகளை எல்லாம் உரக்கச் சொல்லிய கரிசல் காட்டு கம்பீரம் மறைந்துவிட்டது அதிா்ச்சியளிக்கிறது. தனித் தமிழ் எழுத்துலகில் தனக்குவமை இல்லைதான் என்று தரணியெல்லாம் போற்றும் வண்ணம் புதிய பாணியில் புரட்சிகளைச் செய்தவா் கி.ரா.

    இதேபோல, புதுவை மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp